செய்திகள்

கணவருடனான பிரிவு குறித்து நடிகை நந்திதா தாஸ் பேச மறுப்பது ஏன்?

சிலசமயங்கள் சில ஜோடிகள் அற்புதமாக வாழ்வார்கள்...

IANS

பிரபல நடிகை நந்திதா தாஸ், தனது கணவர் சுபோத் மஸ்கராவைப் பிரிய முடிவெடுத்துள்ளார். இவர்களுடைய 7 வருட திருமண வாழ்க்கையில் விஹான் என்கிற 6 வயது மகன் உண்டு.

2002-ல் செளம்யா சென்னைத் திருமணம் செய்தார் நந்திதா தாஸ். இருவரும் 2007-ல் விவாகரத்து செய்தார்கள். பிறகு 2010-ல் சுபோத்தைத் திருமணம் செய்து தற்போது அவரைப் பிரிய முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் நந்திதா தாஸ் கூறியதாவது: ஆமாம். நாங்கள் பிரிவதாக வெளியான செய்திகள் உண்மையே. இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருவருக்குமே எங்கள் மகனின் வாழ்க்கை முக்கியம். எனவே எங்கள் மூவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். பிரிவது குறித்து மறைப்பதில் ஒன்றும் இல்லை. மேலும் இதுகுறித்து பேசவும் ஒன்றுமில்லை. ஒரு மகன் இருக்கையில் கணவரைப் பிரிவது என்பது அவ்வளவு எளிதல்ல. எங்களுக்கு மகனின் வாழ்க்கை முக்கியம். அவன் நன்றாக வளர்வதில் இருவரும் உறுதியாக உள்ளோம். நான் இயக்கும் மண்டோ படம் முடிவடையும் வரை நான் மும்பையில் இருப்பேன். அதற்குப் பிறகு நான் வளர்ந்த தில்லிக்கே செல்லலாமா என யோசித்துவருகிறேன் என்று கூறினார். 

சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிவு குறித்து வெளிப்படையாக பேசமறுத்துவிட்டார் நந்திதாதாஸ். ஒரே துறையில் பணியாற்றியதால் பிரிய நேர்ந்ததா என்கிற கேள்விக்கு நந்திதா தாஸ் கூறியதாவது:

திருமண உறவுகளில் விதிமுறைகள் கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்ததால் இந்தப் பிரிவு ஏற்படவில்லை. சிலசமயங்கள் சில ஜோடிகள் அற்புதமாக வாழ்வார்கள். உண்மையில் நானும் சுபோத்தும் ஒரே துறையில் பணிபுரிவது கிடையாது. ஒரேயொரு நாடகத்தில் மட்டும் இருவரும் இணைந்து பணியாற்றினோம். எனவே ஒரே துறையில் பணியாற்றுபவர்களால் ஒற்றுமையாக வாழமுடியாது என்று நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை. உறவுகள் மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT