செய்திகள்

ரஜினிக்கு அடுத்ததாக சூர்யாவுக்குப் பெரிய மார்க்கெட் உள்ளது: சிங்கம் 3 தயாரிப்பாளர்

எழில்

இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சி 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள்.

டிசம்பர் மாத இறுதியில் வெளியாக இருந்த சிங்கம் 3, ஜனவரி 26 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கவேண்டிய நிலைமை உண்டானது. இந்நிலையில் பிப்ரவரி 9 அன்று சி 3 படம் வெளிவரும் என்று தற்போது உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தைச் சேர்ந்த ஞானவேல் ராஜா கூறியதாவது:

உலகம் முழுக்க பிப்ரவரி 9-ம் தேதி சி 3 படம் வெளியாகவுள்ளது. படத்தை பிரிவியூவில் பார்த்த அனைவருக்கும் படம் மிகவும் பிடித்ததாகச் சொன்னார்கள். ரஜினிக்குப் பிறகு கோலிவுட்டில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் சூர்யா. அவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். எனவே சி3 தெலுங்குப் பதிப்பும் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கிறோம். 

சி 3 படம் வெளியாகத் தாமதமானதற்கு நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், வர்தா புயல், பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என பல்வேறு காரணங்களால் படம் வெளியாகத் தாமதமானது. பிப்ரவரி மாதம் ஸ்டூடியோ கிரீனுக்கு ராசியான மாதம். 10 வருடங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த பருத்தி வீரன் பிப்ரவரி மாதத்தில்தான் வெற்றி பெற்றது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT