செய்திகள்

'ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை': லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை பற்றி ரஹ்மான் 'பீலிங்'!

ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு நன்றி என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார் 

DIN

சென்னை: ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு நன்றி என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார் 

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'நேற்று, இன்று, நாளை’ என்கிற பெயரில் உலகளாவிய இசை சுற்றுப்பயணம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ல் லண்டனில் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகவும், அதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் சிலர், நிகழ்ச்சியியலிருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவமானது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அவரது சகோதரி ரைஹானா இதுகுறித்து உரிய விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எனது ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு எனது நன்றி.

எனது ரசிகர்களுக்கு என எப்பொழுதும் சிறப்பானவற்றையே வழங்க நேர்மையான முறையில் முயற்சிக்கிறேன்.

இவ்வாறு ரஹ்மான் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு!

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடம் தரக் கூடாது: கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தியாகராஜன் குமாரராஜா - விஜய்சேதுபதி கூட்டணி..! ஜப்பானிலும் வெளியாகும் பாக்கெட் நாவல்!

DMK பொண்ணு, RSS பையன்; காதல் கதை! | இயக்குநர் Raju Murugan உடன் சிறப்பு நேர்காணல் | Dinamani Talkies

2-வது உலகக் கோப்பையை தவறவிட்ட இந்தியா.. முதல்முறை சாம்பியனான இலங்கை! 2014 ரீவைண்ட்!!

SCROLL FOR NEXT