தொலைப்பேசி வழியாகத் தனக்குக் கொலை மிரட்டல் வந்ததாக பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
நேற்று இரவு தனக்கு ஒருவர் போன் செய்தார். அப்போது, தான் அந்த நபருக்கு ரூ. 50 லட்சம் தரவேண்டும் என்றும் லக்னோவைச் சேர்ந்த ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யாவிட்டால் தன்னையும் தன் மனைவி சோனி ரஸ்தான், மகள் ஆலியா பட் ஆகியோரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக மகேஷ் பட் கூறியுள்ளார்.
முக்கியமாகப் பணம் தர மறுத்தால் மனைவி, மகளைத் துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்றும் மகேஷ் பட் மிரட்டப்பட்டுள்ளார். முதலில் இந்தத் தொலைப்பேசி அழைப்பை ஏதோ ஒரு வேடிக்கையான அழைப்பாகக் கருதியுள்ளார் மகேஷ் பட். ஆனால் பேசும்போது மிகுந்தத் தீவிரத்துடனும் மிரட்டல் தொனியுடனும் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி ஜூஹூ காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
தற்போது மகேஷ் பட் குடும்பத்துக்கு காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.