பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமா?
சத்யராஜிடம் கேட்டால் தெரியுமா? பாகுபலி 2 படம் வெளிவரும் முன்பு அந்த ரகசியத்தை அவர் மட்டும் உடைத்துவிடுவாரா என்ன?
பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்கிற கேள்வியை சமீபத்தில் எதிர்கொண்டார் சத்யராஜ். அதற்கு அவர் நக்கலாக சொன்ன பதில் - ஏனென்றால் என் இயக்குநர் கொல்லச் சொன்னதால் கொன்னேன் என்றார்!
மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக இந்தக் கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறேன். என் குடும்பத்தினரிடம் கூட இதுபற்றி இன்னும் சொல்லவில்லை. இந்தத் துறையில் 40 வருடங்களாக உள்ளேன். ஒரு படத்தின் கிளைமாக்ஸையோ முக்கிய காட்சியின் ரகசியத்தையோ வெளியே சொல்வது சரி கிடையாது. பாகுபலி கதாபாத்திரங்கள் புகழ்பெறும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்தியா முழுக்கப் பரபரப்பாகப் பேசப்படும் என்று ஒருபோதும் எண்ணவில்லை. மீம்கள் கூட உருவாக்குகிறார்கள். இந்தப் பேரும் புகழும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன என்றார்.
கடந்த வருடம் இயக்குநர் ராஜமெளலியிடம், பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்று கேட்டபோதும் இதேபோல ஒரு பதில்தான் சொன்னார்: பாகுபலியை கட்டப்பா கொன்றதன் காரணம் - நான் அவனைக் கொல்லச் சொன்னதுதான் என்றார்.
படம் வருகிறவரை இப்படிப்பட்ட பதில்கள்தான் கிடைக்கும்போல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.