செய்திகள்

தவறான தகவலை யாரும் நம்பவேண்டாம்: இயக்குநர் சுரேஷ் மேனன் விளக்கம்

சில தொலைக்காட்சிகளில் நான் இறந்துபோனதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எழில்

புதிய முகம், பாசமலர்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் மேனன் இறந்துபோனதாக இன்று காலையில் செய்தி ஒன்று வெளியானது.  இந்நிலையில், அத்தகவல் தவறானது என்று சுரேஷ் மேனன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று காலை சுரேஷ் மேனன் இறந்துபோனதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் பலரும் பரபரப்பு அடைந்தார்கள். மலையாளத்தில் புதிய முகம் என்கிற படத்தை இயக்கிய தீபன் இறந்துபோயுள்ளார். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் நேர்ந்த குழப்பம் இது.  

இந்நிலையில் இதுகுறித்து சுரேஷ் மேனன் ஃபேஸ்புக்கில் கூறியதாவது: சில தொலைக்காட்சிகளில் நான் இறந்துபோனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதை யாரும் நம்பவேண்டாம் என்று தகவல் வெளியிட்டதோடு கூடவே ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT