செய்திகள்

விரைவில் வெளிவரவுள்ள கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி!

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வந்த தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்...

எழில்

இறைவி படத்துக்குப் பிறகு பிரபுதேவா நடிப்பில் உருவாகி வந்த தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு.

கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று பேட்டியளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து அடுத்தச் சில மாதங்களில் மெர்குரி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT