செப்டம்பர் 15-ல் வெளியாகிறது சரத் குமார் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் 2
சிலவருடங்களுக்கு முன்பு உறுப்பு தானத்தை வலியுறுத்தி சென்னையில் ஒரு நாள் படம் வெளியானது...
சரத் குமார், சுஹாசினி, நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - சென்னையில் ஒரு நாள் பாகம் 2. ஜேபிஆர் இப்படத்தை இயக்கியுள்ளார். ராஜேஷ் குமாரின் நாவலை முன்வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சிலவருடங்களுக்கு முன்பு உறுப்பு தானத்தை வலியுறுத்தி சென்னையில் ஒரு நாள் படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 15 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.