நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை, நடிகர் விஜய் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அனிதா (17). நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் கடந்த 1 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்டோர் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அனிதா வீட்டுக்குச் சென்ற நடிகர் விஜய், அனிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பிறகு, அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார்.