பள்ளிப் பாடத் திட்டத்தில் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு: நடிகர் விவேக் கோரிக்கை
பள்ளிப் பாடத் திட்டத்தில் மரம் நடுதல் குறித்த விஷயங்களைச் சேர்த்து விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்று..
பள்ளிப் பாடத் திட்டத்தில் மரம் நடுதல் குறித்த விஷயங்களைச் சேர்த்து விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மரம் நடுவது தொடர்பான விழிப்புணர்வுப் பாடங்களைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்துக்குச் சென்றார் நடிகர் விவேக். கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதன்படி அமைச்சர் வீரமணியைச் சந்தித்து தன்னுடைய கோரிக்கை மனுவை அளித்தார். மரம் நன்கு வளர்த்த மாணவர்களுக்கு அரசு பாராட்டுப் பத்திரம் வழங்கினால் அது அவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்றும் விவேக் வேண்டுகோள் வைத்துள்ளார்.
விவேக் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.