ஹிந்திப் படம் இயக்கவுள்ள பா. இரஞ்சித்!
பழங்குடி இன மக்களின் விடுதலைக்காகப் போராடிய பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது...
பழங்குடி இன மக்களின் விடுதலைக்காகப் போராடிய பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது. பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையை ஹிந்திப் படமாக எடுக்கவுள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித்.
ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த உலிஹட்டில் பிறந்தவர் பிர்ஸா முண்டா. பழங்குடி இன மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய முண்டா, 1890களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, 25 வயதில் சிறையில் இறந்தார். அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித். ரஜினி நடித்த காலா படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது.
நமா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் மே மாதம் தொடங்கவுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Advertisement
பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்கவுள்ளதாக அறம் படம் இயக்குநர் கோபி நயினாரும் சமீபத்தில் அறிவித்தார்.