செய்திகள்

இயக்குநர் அட்லி மீது துணை நடிகை புகார்!

எழில்

இயக்குநர் அட்லி, படப்பிடிப்பின்போது தன்னைத் தரக்குறைவாக நடத்தியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி, சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்புத்தளத்தில் இயக்குநர் அட்லியும் உதவி இயக்குநர்களும் தன்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக துணை நடிகை கிருஷ்ணதேவி, சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் நான் பணிபுரிந்தேன். படப்பிடிப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இயக்குநர் அட்லியும் உதவி இயக்குநர்களும் என்னைத் தரக்குறைவான வார்த்தைகளில் பேசி என்னை வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பிவிட்டார்கள். எனவே அட்லி மற்றும் உதவி இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT