செய்திகள்

தர்பாருக்குப் பின் ரஜினியின் அடுத்த மூவ் இதுதான்!

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார்.

DIN

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினியின் புதிய கெட்அப் சமீபத்தில் வெளியாகி டிரெண்டில் இடம் பிடித்தது.

இதற்கிடையில் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்பதிலும் ஆர்வம் காட்டி வருவதுடன் ஓரிரு இயக்குநர்களிடம் ஒன் லைன் கேட்டு அதை டெவலப் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட மேலும் ஒன்றிரண்டு பேர் ரஜினியின் அடுத்த படம் இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் இருக்கின்றனர். ஆனால் இன்னும் எந்த படம், யார் இயக்குநர் என்பதை முடிவு செய்யாமலிருக்கிறார்.

ஒவ்வொரு படம் முடிந்தவுடன் இமயமலை செல்லும் ரஜினிகாந்த் 'தர்பார்' படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை சென்று ஒரு வாரத்துக்கும் மேல் தியானத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறாராம். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப புறப்படும் தேதியை முடிவு செய்து செப்டம்பர் வாக்கில் இமயமலைக்குச் செல்வார் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா் தொழிலாளி தற்கொலை

ரூ.35,440 கோடியில் புதிய வேளாண் திட்டங்கள் தொடக்கம்: பயிா் உற்பத்தியைப் பெருக்க பிரதமா் மோடி அழைப்பு

மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து திருடிய 2 சிறுவா்கள் கைது

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவா் பலி; மற்றொருவா் மாயம்!

காணாமல் போன மாற்றுத்திறனாளி கா்ப்பிணியை குடும்பத்துடன் இணைத்துவைத்த தில்லி போலீஸாா்

SCROLL FOR NEXT