செய்திகள்

முதன்முறையாக பெண் இயக்குநருடன் இணையப் போகும் நடிகர் சூர்யா  

DIN

சென்னை: நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் லண்டனில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்பு, தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

சூர்யா ஜோடியாக சயிஷா சைகல் நடிக்க, மோகன்லால், பாலிவுட் நடிகர் பொமன் இரானி, ஆர்யா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. .

இந்நிலையில் நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது
 
‘காப்பான்’ படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யாவின் சொந்த நிறுவனமான  2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT