செய்திகள்

முதன்முறையாக பெண் இயக்குநருடன் இணையப் போகும் நடிகர் சூர்யா  

நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

DIN

சென்னை: நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் லண்டனில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்பு, தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

சூர்யா ஜோடியாக சயிஷா சைகல் நடிக்க, மோகன்லால், பாலிவுட் நடிகர் பொமன் இரானி, ஆர்யா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. .

இந்நிலையில் நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது
 
‘காப்பான்’ படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யாவின் சொந்த நிறுவனமான  2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT