மூன்று மாதங்களில் நிறைவுபெற்ற ஷ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கிய ‘ஹலோ சகோ' தொலைக்காட்சி நிகழ்ச்சி!
ஹலோ சகோ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் பாகம் (சீஸன் 1) நிறைவுபெற்றுள்ளது...
கடந்த சில மாதங்களாக, நடிகை ஷ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கிய ஹலோ சகோ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் பாகம் (சீஸன் 1) நிறைவுபெற்றுள்ளது.
சன் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 28 அன்று தொடங்கிய ஹலோ சகோ நிகழ்ச்சியை ஷ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் சீஸன், கடந்த ஜனவரி 27-ம் தேதியுடன் நிறைவு பெற்றதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார் ஷ்ருதி ஹாசன்.
எனக்கு இது நல்ல அனுபவமாக இருந்தது. விருந்தினர்களை இன்னும் புரிந்துகொள்ள முடிந்தது என்று இன்ஸ்டகிராம் தளத்தில் எழுதியுள்ளார் ஷ்ருதி ஹாசன்.