செய்திகள்

இனிமேல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்த மாட்டேன்: லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்!

எந்தவொரு தொலைக்காட்சியிலும் அந்த நிகழ்ச்சியை நான் நடத்தப்போவதில்லை என நான் தெளிவுபடுத்துகிறேன்...

எழில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாவதில்லை. இந்நிலையில் மற்றொரு தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடரவுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நான் இன்னொரு தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைத் தொடரவுள்ளதாக ஒரு வதந்தி உள்ளது. அப்படி எந்தவொரு தொலைக்காட்சியிலும் அந்த நிகழ்ச்சியை நான் நடத்தப்போவதில்லை என நான் தெளிவுபடுத்துகிறேன். அந்த நிகழ்ச்சிக்காக நான் சிறப்பாகப் பணியாற்றினேன். அது முடிந்துவிட்டது. ஜீ தமிழ் தொலைக்காட்சியுடனான அற்புதமான காலம் அது. மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் என்னை அணுகினார்கள். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மீண்டும் தொடரமாட்டேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT