முகப்பு
செய்திகள்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் புதிய சிக்கல்கள்!

'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க முயன்று எம்.ஜி.ஆர் கைவிட்டார். தொடர்ந்து இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பலரும் அதைப் படமாக்க முயன்றனர்

Updated On : 20 மே 2019, 1:09 pm IST
பகிர்:


'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க முயன்று எம்.ஜி.ஆர் கைவிட்டார். தொடர்ந்து இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பலரும் அதைப் படமாக்க முயன்றனர். இருப்பினும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. 

கமலும் தன் பங்கிற்கு வேலைகளைத் தொடங்கினார். அது அப்படியே நின்று போனது. இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க மணிரத்னம் முயன்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இரண்டு பாகங்களாக இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் முடிவெடுத்திருந்தார். 

இதற்கான வேலைகளிலும் அவரது உதவி இயக்குநர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு உள்பட பலர் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தைத் தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் இந்த படத்திலிருந்து விலகியதாகத் தெரிகிறது. இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே லைகா விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை இப்போது ஒரு வேளை கைவிட்டாலும், மீண்டும் அம்முயற்சியைத் தொடர்வதாக முடிவெடுத்துள்ளனர். தனது அடுத்த படத்தை மல்டி ஸ்டார் படமாகவே இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.