செய்திகள்

மனோரமாவின் மகன் பூபதி மருத்துவமனையில் அனுமதி

DIN

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனோரமாவின் மகன் பூபதி, சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார்.

கரோனா வைரஸால் உண்டாகும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இச்சமயத்தில் மது கிடைக்காததால் தூக்க மாத்திரைகளை பூபதி அதிக அளவில் உட்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனையில் பூபதிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து பூபதியின் குடும்பத்தினரிடமிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT