என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை: ராதிகாவை வாழ்த்தும் பாரதிராஜா
திரையுலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மூத்த நடிகை ராதிகாவை இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.
திரையுலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மூத்த நடிகை ராதிகாவை இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராதிகா. தற்போது திரையுலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி ராதிகாவை வாழ்த்தி இயக்குநர் பாரதிராஜா ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..
Advertisement
42 வருடமாகிறது, என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை..
பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை. உன் திரை உலகப் பயணத்துக்கும் உன் பாசத்துக்கும் முடிவேதும் இல்லை. வாழ்த்துக்கள் என்றார்.
இதற்குப் பதில் அளித்த ராதிகா கூறியதாவது:
இதைவிடவும் சிறப்பு எதுவுமில்லை. உங்களால் தான் இந்த நிலையில் நான் உள்ளேன். உங்கள் வாழ்த்துகள் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. ஆண்கள் ஆதிக்கமுள்ள இந்த உலகில் பெண்களின் சாதனைகள் கொண்டாடப்படுவதில்லை. இந்நிலையில் உங்கள் வாழ்த்து எப்போதும் போல சிறப்பைப் பெறுகிறது என்றார்.