செய்திகள்

தனது படத்தை இயக்கும் அதே வேளையில் 5 புதிய படங்களைத் தயாரிக்கிறார் பா.ரஞ்சித்!

DIN

இயக்குநர் பா ரஞ்சித் சமீபத்தில் அதியன் அதிராயின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை தயாரித்தார். இப்போது, அவரது இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களுக்காக பா.ரஞ்சித்துடன் இணையவிருப்பதாக முகநூல் பதிவொன்றில் தமிழ் பிரபா அறிவித்துள்ளார். தனது பேட்ட நாவலின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற எழுத்தாளரானார் தமிழ் பிரபா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இது குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு படமாக இருக்கலாம் என்று தெரிகிறது. வட சென்னையில் களமாக அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் சல்பேட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது, ஆர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில், ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷனின் மூலம் லெனின் பாரதி, மாரி செல்வராஜ், அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப் மற்றும் சுரேஷ் மாரி ஆகியோர் இயக்கும் ஐந்து படங்களைத் தயாரிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT