செய்திகள்

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்றுள்ள மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்!

எழில்

பிரபல நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 13 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

பெண்கள் மட்டுமே போட்டியாளர்களாகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் ரூ. 1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கெளசல்யா, காது கேளாத, வாய் பேச முடியாதவர். கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவர் பங்கேற்று ரூ. 1 கோடி பரிசு வென்றதும் இதுவே முதல்முறை. 

கெளசல்யா ரூ. 1 கோடி வெல்லும் கோடீஸ்வரி நிகழ்ச்சி இன்றும் நாளையும் ஒளிபரப்பாகவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT