செய்திகள்

சென்னை மீளும்;வாழும்: நம்பிக்கை கொடுக்கும் நடிகர் விவேக்

DIN

சென்னை: கரோனா பிரச்னையிலிருந்து சென்னை மீளும் என்று நடிகர் விவேக் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிலர் சென்னையில் இருந்து வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.  

இந்நிலையில் கரோனா பிரச்னையிலிருந்து சென்னை மீளும் என்று நடிகர் விவேக் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:    

எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்; வாழும்!   

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT