இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவர், கரீனா கபூர்.
அவர் நடிக்க ஆரம்பித்து 20 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
என் முதல் ஷாட் காலை 4 மணிக்கு எடுக்கப்பட்டது. இன்று காலை 4 மணிக்கு எழுந்து, கண்ணாடியில் என்னைப் பார்த்துச் சொன்னேன் - என் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு இது. கடின உழைப்பு, பொறுப்பு, தன்னம்பிக்கையுடன் 20 வருடங்களாகப் பணியாற்றியுள்ளேன். இயக்குநர் ஜேபி தத்தாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 20 வருடங்களானாலும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர் ஒரு ஹேஷ்டேக் மூலம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
20 வருடங்களுக்கு முன்பு வெளியான ரெப்யூஜி படத்தில் அபிஷேக் பச்சனும் கரீனா கபூரும் அறிமுகமானார்கள்.
தற்போது, அமீர் கானுடன் இணைந்து லால் சிங் சத்தா என்கிற படத்திலும் கரண் ஜோஹரின் தக்த் என்கிற படத்திலும் கரீனா கபூர் நடித்து வருகிறார்.