செய்திகள்

விஜய்யுடன் ஒரு வரலாற்றுப் படம்: மனம் திறந்த சசிகுமார்!

DIN

சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய இயக்குநர் சசிகுமார், விஜய்யுடன் இணைந்து வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குவது குறித்து பேசியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஒரு வரலாற்றுப் படத்தை எடுக்க விரும்பினேன். இந்தக் கதையை விஜய்யிடமும் சொன்னேன். அவருக்கும் கதைப் பிடித்திருந்ததால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் சில காரணங்களால் படத்தை எடுக்க முடியாமல் போனது. படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் விஜய்யுடன் இணைந்து நிச்சயம் ஒரு வரலாற்றுப் படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

சசிகுமார் அடுத்ததாக முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படம் - முந்தானை முடிச்சு. 1983-ல் வெளியானது. சசிகுமார் நடிக்கும் படத்துக்கு கே. பாக்யராஜ் திரைக்கதை எழுத ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT