முகப்பு
செய்திகள்

நடிகர் சூர்யா நிறுவனத்தின் பேரில் மோசடி : எச்சரிக்கைப் பதிவு

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக பல்வேறு படங்களை தயாரித்து, விநியோகித்து வருகிறார். இவரது தயாரிப்பில் 'உடன் பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''எங்கள் பெயர் மற்றும் லோகோவுடன் போலியான இமெயில் முகவரியை உருவாக்கி நடிகர், நடிகையர் தேர்வுக்கு ஒருவர் அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. 

Advertisement

 எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற குற்றத்துக்காக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். வருங்காலங்களில் இதுபோன்ற நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். மேலும் இதுபோன்ற நபர்களிடம் உங்களின் சுய விவரங்களை தெரிவிக்காதீர்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் போலியான இமெயில் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments