'
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த தொடர் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் மிக பிரபலம்.
இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரின் ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், காரில் கோபிநாத் தனது கையில் பூவை வைத்துக்கொண்டு ராதிகாவுடன் பேசிக்கொண்டிருக்கின்றார். அதனை கோபிநாத்தின் அப்பா, ராமமூர்த்தி பார்த்து கோபமடைகிறார். இவன் இன்னும் திருந்தவில்லையா என ராமமூர்த்தி மனதுக்குள் நினைப்பது போல இந்த ப்ரமோ அமைந்துள்ளது.
இதையும் படிக்க | ''இப்போ வரைக்கும் உனக்கு என்ன ஆச்சுனு தெரியல'': மறைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா குறித்து பிரபலங்கள் உருக்கம்
இதனை பகிர்ந்த விஜய் டிவி, வசமா மாட்டுனீங்க பூமர் அங்கிள் என குறிப்பிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை விஜய் டிவி தனது ப்ரமோவில் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.