மேடையில் ரஹ்மான் குறித்து கமல்ஹாசன் சொன்ன கருத்து: ஆச்சரியத்தில் ரசிகர்கள்
இசையமைப்பாளர் ரஹ்மான் குறித்து கமல்ஹாசன் சொன்ன கருத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள சில நேரங்களில் சில மனிதரக்ள் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை அறிமுகம் செய்து பேசினார்.
அப்போது பேசிய அவர், இயக்குநரை எனக்கு தெரியும். நல்ல உழைப்பாளி. குறுகிய காலத்தில் வந்துவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கு தெரியும் இதற்காக அவர் எவ்வளவு நாள் காத்திருந்தார் என்று.
இதையும் படிக்க | சமந்தா பாடலுக்கு தமிழகத்திலும் வலுக்கும் எதிர்ப்பு: இப்படியொரு காரணமா ?
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் ரதன் பேசும்போது என்னை எல்லோரும் தெலுங்கு என்று நினைத்துக்கொள்கிறார்கள். நான் தமிழ் தான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். இசைக்கு அந்த பாகுபாடு கிடையாது. அவர்கள் உங்களை, கன்னட, ஹிந்தி பட இசையமைப்பாளர் என்று நினைத்துக் கொள்ளட்டும்.
உங்களுக்கு தைரியம் கொடுத்த ரஹ்மானுக்கு நன்றி. ஏனெனில் அவர் வேறுமாதிரி சொல்லி உங்களை இந்தப் பக்கமே வர விடாமல் செய்திருக்கலாம். எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் ஒரு விஷயத்தை மனதார சொல்வார். அவர் தான் உங்களை இந்த மேடை வரை அழைத்து வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். என்று பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.