இயக்குநர் வெங்கட் பிரபுவின் புதிய படம் அறிவிப்பு
மாநாடு படத்துக்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநாடு படத்துக்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2007-ல் சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வெங்கட் பிரபு. சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28-2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். பார்ட்டி என்கிற படத்தை இயக்கியுள்ள வெங்கட் பிரபு அடுத்ததாக சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மாநாடு படத்துக்கு அடுத்ததாக ராக்போர்ட் நிறுவனம் சார்பாக டி. முருகானந்தம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.