செய்திகள்

பிக்பாஸ் நமிதா மாரிமுத்து இப்பொழுது என்ன செய்கிறார் ? : வெளியான விடியோ: ரசிகர்கள் நெகிழ்ச்சி

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமிதா ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பிக்பாஸில் திருநங்கை நமிதா மாரிமுத்து போட்டியாளராக கலந்துகொண்டார். இதனையடுத்து விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள் குவிந்தது. 

நிகழ்ச்சியில் பேசிய நமிதா, நாங்கள் மாறிவிட்டோம். ஆனால் எங்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்றுங்கள் என மிக உருக்கமாக தெரிவித்தார். ரசிகர்கள் அவருக்கு பெரிதும் ஆதரவு அளிக்கத் துவங்கினர். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறினார். 

நமிதா மாரிமுத்து சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு திரும்பி வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர், விடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சாலையோரம் வசிப்போருக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு வழங்குகிறார். இதனையடுத்து நமிதாவின் மனித நேயத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT