செய்திகள்

மீண்டும் கதாநாயகன் - தன் புதிய படத்தின் டப்பிங் பணியை முடித்துக் கொடுத்த செந்தில்

DIN

கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகர் செந்தில் தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர காமெடியர்களாக வலம் வந்த கவுண்டமணி-செந்தில் இணை கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் இணைத்து நடித்திருக்கிறார்கள். இருவரின் நகைச்சுவைகளும்  இன்றும் ரசித்துப் பார்க்க கூடிய வகையில் இருந்தாலும் வயது மூப்பு காரணமாக கவுண்டமணி திரைத்துறையில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகர் செந்தில் தற்போது ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.

பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அதன் அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் தன்னுடயை டப்பிங் பணிகளை செந்தில் முடித்துக்கொடுத்திருக்கிறார்.

மேலும் இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT