விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ தொடர் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
இதனையடுத்து நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. தற்போது அவர் தேன்மொழி பி.ஏ என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க | பீஸ்ட் உடன் மோதும் வலிமை : வெளியீட்டுத் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்
இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் உச்சத்தின் இருந்தபோது இந்தத் தொடரின் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் உருவானது. அதன் காரணமாக இந்தத் தொடர் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இந்தத் தொடரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பானது. ஆனால் எவ்வளவு முயன்றும் முன்புபோல் இந்தத் தொடரை சுவாரஸியமாக கொண்டு செல்ல முடியவில்லை. இதன் காரணமாகவே இந்தத் தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.