செய்திகள்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

DIN

படப்பிடிப்புத் தளத்தில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லத்திகா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அந்தப் படத்துக்கு பிறகு பவர் ஸ்டாருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கடைசியாக கேப்மாரி என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தையடுத்து தற்போது வனிதா விஜயகுமாருடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதுகு வலியின் காரணமாகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT