இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நதியா
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் நடிகை நதியாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் நடிகை நதியாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிகை நதியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் நடிகை நதியாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நடிகை நதியா இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா: நடிகை சமந்தாவுக்கு விருது
மேலும் நதியாவின் அப்பா, அம்மா வீட்டில் வேலை செய்பவர் உள்ளிட்டோருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனையடுத்து நதியா உட்பட 4 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நடிகை நதியா விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.