முகப்பு
செய்திகள்

திருமண நாளில் மறைந்த மனைவி குறித்து இயக்குநர் அருண்ராஜா உருக்கம்

திருமண நாளில் மறைந்த மனைவி குறித்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  

Updated On : 6 டிசம்பர் 2021, 2:35 pm IST
பகிர்:


பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சிறந்த விமர்சனங்களைப் பெற்ற கனா திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.

இதனையடுத்து அருண்ராஜா தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஹிந்தியில் வெளியான 'ஆர்ட்டிகள் 15' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது. 

கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த அருண்ராஜாவின் மனைவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த நிகழ்வு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் இயக்குநர் அருண்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ''திருமண நாள் வாழ்த்துகள் பாப்பி'' என அழுகின்ற எமோஜியை பதிவு செய்துள்ளார். அவருக்கு பதிலளித்த இயக்குநர் ஜான் மகேந்திரன், ''இந்த பதிவுக்கு பின் இருக்கும் வலி... யாருக்குமே வரக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments