செய்திகள்

சூர்யா 42: எண்ணூர் துறைமுகத்தில் பிரம்மாண்ட படப்பிடிப்பு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா42’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா42’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரலாற்று பின்னணியில் படத்தின் கதையாகவும் நிகழகாலம் கலந்தும் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது. 5 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிகிறது. அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு முடிக்க உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பிரம்மாண்ட செட் போட்டு சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. துணிவு படத்தின் சண்டை பயிற்சியாளர் சுந்தர் மாஸ்டர் இந்தப் படத்துக்கும். இந்த மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT