செய்திகள்

நடிகர் விஜய்யுடன் இணையும் நானி ?

DIN

பீஸ்ட் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தோழா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமைான தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவிருக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு கதாநாயகன் நானி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். 

விஜய் நடித்துள்ள குஷி, திருப்பாச்சி போன்ற படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரேற்பை பெற்றுள்ளன. மேலும் அவரது படங்களான துப்பாக்கி, நண்பன், மெர்சல், தெறி போன்ற பல படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்ட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக துப்பாக்கி படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தெலுங்கு பேசி அசத்தினார். மேலும் தெலுங்கில் முன்னணி கலைஞர்களான வம்சி, தில்ராஜு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் விஜய் படத்தில் பணிபுரியவிருப்பதால் தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாயகியும் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான நாயகி ஒருவரே நடிப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ராஷ்மிகா நடிப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நானி நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் ஒருவேளை உண்மையானால் தமிழைப் போலவே தெலுங்கிலும் விஜய் பெரும்வெற்றியுடன் கால் பதிக்க இந்தப் படம் உதவும். நானி நடித்து சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை திருமணம் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் தகவல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மோகன் பாகவத் சுவாமி தரிசனம்

பேராவூரணி அருகே கடலுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

புதிய அன்னுகுடி பாசன வாய்க்கால் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

ஒரத்தநாட்டில் காவல் துறை சாா்பில் மகளிருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT