ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழில் ரணம் ரத்தம் ரௌத்திரம் என்ற பெயரில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகியுள்ளது.
படத்தை விளம்பரப்படுத்தும் முனைப்பில் படக்குழு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக படக்குழு சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் ரசிகர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர். மேலும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக மட்டும் ரூ.18 முதல் ரூ.20 கோடி வரை செலவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படம் வெளியாகாததால் தயாரிப்பு தரப்புக்கு அந்தத் தொகை வீணாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.