பொங்கலை முன்னிட்டு பிரபலங்கள் ஒவ்வொரும் தங்கள் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்தத் தகவலை, தனது அப்பா மீண்டும் பிறந்திருப்பதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் முதன்முறையாக தனது மகனுடன் அவர் புகைப்படம் பகிர்ந்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இருவரும் பச்சை வண்ணத்தில் சட்டை அணிந்திருக்கின்றனர். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.