செய்திகள்

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட விஷ்ணு விஷால் உருக்கம்: ''எனக்கு கடந்த 10 நாள் மிக மோசமாக இருந்தது''

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணு விஷால் தான் முற்றிலும் குணமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

DIN

கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு வழியாக கரோனாவில் இருந்து குணமடைந்தேன். எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனக்கு லேசான அறிகுறிகள் இல்லை. 

கடந்த 10 நாட்கள் மிகக் கடுமையாக இருந்தது. மிக சோர்வாக இருந்தது. விரைவில் பழையபடி பணிகளில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார். 

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக காடன் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது எஃப்ஐஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் ரவி தேஜாவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT