முகப்பு
செய்திகள்

''வின்னர் 2 ஆம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும்'' - பிரசாந்த் சுவாரசியத் தகவல்

வின்னர் 2 ஆம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் தெரிவித்தார். 

Updated On : 1 ஜூலை 2022, 2:58 pm IST
பகிர்:

வின்னர் 2 ஆம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் தெரிவித்தார். 

ஹிந்தியில் வெற்றிபெறற அந்தாதுன் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

Advertisement

நடிகர் பிரஷாந்த் இன்று(வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2 ஆம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து வின்னர் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.