செய்திகள்

'விவாகரத்துக்கு பிறகு புது மனிதனாக உணர்கிறேன்' - மனம் திறந்து பேசிய நாக சைதன்யா

DIN

விவாகரத்துக்கு பிறகு புது மனிதனாக உணர்வதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள 'தேங்க் யூ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'மனம்' படத்துக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு நாக சைதன்யா பேட்டியளித்தார். 

அப்போது கரோனா ஊரடங்கு மற்றும் சமந்தாவுடன் விவாகரத்து உள்ளிட்ட காரணங்களால் மிகவும் கடினமாக இருந்ததாகவும் இந்தக் காலக்கட்டத்தில் தான் நிறைய மாறியுள்ளதாகவும் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். 

பொதுவாக அதிகம் பேசாத அவர், தற்போது நிறைய பேசுகிறாராம். குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் நெருக்கமாக பழக முடிவதாகவும், ஒட்டுமொத்தமாக புதிய மனிதனாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

நாக சைதன்யா தற்போது ஆமீர்கானுடன் இணைந்து 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்துள்ளார். 'ஃபாரஸ்ட் கம்ப்' என்ற ஆங்கிலப் படத்தின் ரீமேக்கான இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. தமிழில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இந்தப் படத்தை வெளியிடுகிறார். 

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் நாக சைதன்யா நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT