செய்திகள்

பெண் குழந்தைக்கு அம்மாவான நடிகை பிரணிதா: புகைப்படம் பகிர்ந்து மகிழ்ச்சி

DIN

நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.  

அருள்நிதி நடித்த உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரணிதா. பின்னர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். 

தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் பிரணிதா நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரணிதா நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணமாகியிருந்தது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரணிதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று (ஜுன் 10) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT