பேரறிவாளன் விடுதலைக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று வெளியான தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் : அற்புதம்
இயக்குநர் சீனு ராமசாமி : 31 ஆண்டுகள் போராடி ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்.
மாரிசெல்வராஜ்: மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் நவின்: தமிழர்கள் மகிழ்ச்சியில் இன்று என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்
இயக்குநர் ராஜுமுருகன்: பேரறிவாளன் விடுதலை... ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதியின் வெற்றி. ஒரு தாயின் 30 வருட போராட்டத்தின் வெற்றி. துணைநின்ற தமிழக அரசு, வழக்கறிஞர்கள், தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்! என்று பதிவிட்டுள்ளார்.
31 ஆண்டுகள் போராடி
ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.