முகப்பு
செய்திகள்

கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகை ரம்பா!

நடிகை ரம்பா குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக, நடிகை ரம்பா தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 நவம்பர் 2022, 2:10 pm IST
பகிர்:

நடிகை ரம்பா குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக, நடிகை ரம்பா தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து நடிகை ரம்பா, திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நடிகை ரம்பா தற்போது கனடாவில் கனவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கனடாவில், நடிகை ரம்பா குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது அவரது கார் மற்றோரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

நடிகை ரம்பா சுட்டுரைப் பதிவில், "பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் மற்றொரு கார் மோதியதில், நானும் எனது குழந்தைகளும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம்.

என் இளைய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். கெட்ட நேரம்." என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments