பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் பிக்பாஸில் இருக்கும் ரச்சிதாவுக்கு அவரது கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களிடைேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் துவக்க விழா கடந்த ஞாயிறன்று (அக்டோபர் 9) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனக்கே உரிய பாணியில் வரவேற்று ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடன இயக்குநர் மெட்டி ஒலி புகழ் சாந்தி, சன் டிவி தொகுப்பாளர் கதிரவன், நடன இயக்குநர் ராபர்ட், பாடகர் தினேஷ் கனகரத்தினம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ், சின்னத்திரை நடிகை ரச்திதா மகாலட்சுமி, தொகுப்பாளர் மகேஸ்வரி, நகைச்சுவை நடிகர் அமுதவாணன், விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, சின்னத்திரை நடிகர் அஷீம், சின்னத்திரை நடிகை ஆயிஷா, திருநங்கை ஷிவின் கணேசன், நடிகை குயின்சி, இலங்கைை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி உள்ளிட்டோர் போட்டியாளர் கல்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை - நடிகை திரிஷா பதில்
இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதா மகாலட்சுமிக்கு அவரது கணவரும் நடிகருமான தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துகள். ரசிகர்களின் இதயங்களை வெல்ல வேண்டும்'' என வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.