திரைப்படப் பத்திரிகையாளர் மறைவு: தனுஷ், அனிருத், கீர்த்தி சுரேஷ் இரங்கல்
தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும்...
திரைப்படப் பத்திரிகையாளர் கெளசிக்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
35 வயது கெளசிக், திரைப்படப் பத்திரிகையாளராக அறியப்பட்டவர். சமூகவலைத்தளங்களில் திரைப்படச் செய்திகள், வசூல் விவரங்களைத் தொடர்ந்து அளித்து வந்ததால் ட்விட்டரில் 4 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக கெளசிக் நேற்று காலமானார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும் கெளசிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.