முகப்பு
செய்திகள்

ஹிந்தி சினிமாக்களை விட தமிழ், மலையாளப் படங்கள் நன்றாக உள்ளன: அனுராக் காஷ்யப்

ஹிந்தி சினிமாக்களை விட தமிழ், மலையாளப் படங்கள் நன்றாக உள்ளதாக ஹிந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். 

Updated On : 16 ஆகஸ்ட் 2022, 6:50 pm IST
பகிர்:

ஹிந்தி சினிமாக்களை விட தமிழ், மலையாளப் படங்கள் நன்றாக உள்ளதாக ஹிந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். 

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு விருதுகளையும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது. இவரது அடுத்த படம் டாப்ஸி பண்ணு கதாநாயகியாக நடிக்கும் ‘டோபாரா’ படம் வெளியாக இருக்கிறது. இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஹிந்தி சினிமாக்கள் பார்க்கவே பிடிக்கவில்லை. ஹிந்தியில் புதியதாக யாரும் யோசிப்பதில்லை. ஏற்கனவே இருக்கும் கதையைத்தான் மீண்டும் மீண்டும் எடுக்கிறார்கள். ஆனால் மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாவில் புதிய முயற்சிகள் எடுக்கிறார்கள். அவர்களது கலாச்சாரம் பற்றி படத்தில் இருக்கிறது. இந்தியில் அவ்வாறு கலாச்சாரத்தை காட்டவேண்டுமென மெனக்கெடுவதில்லை. குறிப்பாக மலையாள சினிமா அபாரமாக எடுக்கிறார்கள். நான் இப்போதெல்லாம் மலையாளம், தமிழ் சினிமாக்களைத்தான் அதிகம் விரும்பி பார்க்கிறேன்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments