முகப்பு
செய்திகள்

கர்ப்பமான நிலையில் திருமணத்தை அறிவித்த பிரபல டிவி நடிகை!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்கிற தொடரில் நடித்து வருகிறார்.

Updated On : 28 செப்டம்பர் 2022, 3:32 pm IST
பகிர்:

பெங்களூரில் பிறந்து கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த திவ்யா ஸ்ரீதர், கேளடி கண்மணி என்கிற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தமிழில் அறிமுகமானார். மகராசி தொடரில் நடித்தவர் திடீரென அதிலிருந்து விலகினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்கிற தொடரில் நடித்து வருகிறார். முதல் திருமணத்தில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

இந்நிலையில் பிரபல டிவி நடிகரான ஆர்னவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார் திவ்யா. சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரில் நடித்துப் புகழ்பெற்றவர் ஆர்னவ். ஆர்னவைத் திருமணம் செய்ததை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார் திவ்யா. மேலும் தான் கர்ப்பமாக உள்ளதையும் அவர் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

 

கேளடி கண்மணி தொடரின் மூலம் எங்களுடைய பயணம் 2017-ல் தொடங்கியது. எங்களுடைய வாழ்க்கையை இணைந்து வாழ முடிவெடுத்தோம். 5 வருடம் இணைந்து வாழ்ந்ததில் நிறைய காதல், அன்பு, சண்டைகள் இருந்தன. நாங்கள் அதிர்ஷ்டக்கார காதலர்கள். இரு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளோம். பலர் எங்களை வாழ்த்தியுள்ளார்கள். சொந்த வீட்டுக்குச் சென்று எங்களுடைய பெரிய இலக்கை அடைந்தோம். எங்களுடைய குழந்தையை விரைவில் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments