பெரும் எதிர்பார்ப்புடன் சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் தோல்வியடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான சாகுந்தலம் இதுவரை வெறும் ரூ.5 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருப்பதாகவும், கிட்டத்தட்ட ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நஷ்டத்தை தயாரிப்பு நிர்வாகம் எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட 60 கோடி பொருள் செலவில் சாகுந்தலம் உருவாக்கப்பட்டதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகின. இந்தப் படம் திரையரங்குகளுக்கு விற்பனை செய்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35 கோடி வருமானம் திரும்பிவிட்டது. தொலைக்காட்சி சானல்கள் மூலம் சில கோடி வருவாய் ஈட்டப்பட்டிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் படக் குழுவுக்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்றுதான் கணக்குகள் கூறுகின்றன.
சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றிருந்தார்.
மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.
மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இவர்களுடன் சாகுந்தலா - துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாப்பாத்திரத்தை அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா ஏற்றிருந்தனர். நட்சத்திரப் பட்டாளங்களைக் கொண்டிருந்ததால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.