நிதின் சந்திரகாந்த் தேசாய் 
செய்திகள்

4 தேசிய விருதுகளைப் பெற்ற பாலிவுட் கலை இயக்குநர் தற்கொலை!

‘ஜோதா அக்பா்’, ‘லகான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணிபுரிந்த நிதின் தேசாய் (57) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

‘ஜோதா அக்பா்’, ‘லகான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணிபுரிந்த நிதின் தேசாய் (57) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

‘என்டி ஆா்ட் வோ்ல்ட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தேசாய்க்கு கடும் நிதிப் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தின் கா்ஜத் பகுதியில் உள்ள அவரது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கிய ரூ.185 கோடி கடனை தேசாய்க்குச் சொந்தமான நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை. இதைத் தொடா்ந்து, கடன் மறுசீரமைப்புக்கான நடைமுறையைத் தொடங்க, கடனளித்த நிதி நிறுவனம் தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயத்தின் மும்பை கிளையை அணுகியது. அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பம் கடந்த வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

‘ஜோதா அக்பா்’, ‘தேவதாஸ்’, ‘பிரேம் ரத்தன் தான் பயோ’, ‘பரிந்தா’ உள்ளிட்ட திரைப்படங்களின் பிரம்மாண்ட செட்கள் கலை இயக்குநா் நிதின் தேசாயால் வடிவமைக்கப்பட்டன. அவரது மறைவுக்கு ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது உறுதி!

ஸ்ட்ராபெர்ரி சிவப்பு... ரகுல்!

தனது முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

SCROLL FOR NEXT